TNPSC இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் அரசு பணிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் மூலமாக தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!
இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் 2 ஏ பிரிவின் கீழ் வரும் 4 செயல் அலுவலர் பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF இல் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 21ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்கான தேர்வு ஏப்ரல் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பெற https://tamil.samayam.com/