தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் மாற்றங்கள் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

0
தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் மாற்றங்கள் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!
தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் மாற்றங்கள் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!
தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் மாற்றங்கள் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளில் சேர பெரிய சிபாரிசுகள் தேவைப்படும் என்ற நிலை ஏற்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகள் :

தமிழகத்தில் கடந்த வருடங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. நல்ல கல்வியை தன் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதற்காக ஏழை மக்கள் கூட கடன் வாங்கி பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிகளில் நிலை மிக மோசமான சூழலில் இருந்து. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக தலைமையேற்ற திமுக அரசு பள்ளிகல்வித்துறையில் கூடுதல் கவனம் செலுத்தியது. இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்விதொலைக்காட்சியை உருவாக்கி ஊரடங்கு காலத்திலும் அரசு தடையில்லா கல்வியை வழங்கியது.

Flipkart நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

2021 -2022 ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் சேர்க்கை விண்ணப்ப படிவத்திற்கு பணம் வசூலிக்க கூடாது இரு அறிவித்து. மேலும் பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு நல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது. இதனால் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கூட அரசு பள்ளிக்கு சேர்க்கப்பட்டனர். நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் – அரசு முடிவு!

மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் பயிற்சிகளை அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்டமாக 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அரசுக்கு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க சிபாரிசு தேவை என்ற நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!