பிப்.21 (நாளை) முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – மாநில அரசு அறிவிப்பு!

0
பிப்.21 (நாளை) முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் - மாநில அரசு அறிவிப்பு!
பிப்.21 (நாளை) முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் - மாநில அரசு அறிவிப்பு!
பிப்.21 (நாளை) முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – மாநில அரசு அறிவிப்பு!

கோவா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு பிறகு பிப்ரவரி 21ம் தேதியான நாளை முதல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக பள்ளிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை அதிகாரித்து வந்த நிலையில் மத்திய அரசு அணைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தீவிரா கட்டுப்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது. இதனால் அனைத்து அரசுகளும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி செயல்பட்டது. அதன்படி, முன்னதாக மாணவர்களின் நலன் கருதி கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. சமீபத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நிலைமைகளை பொறுத்து கட்டுப்பாடுகளை தளர்த்தவும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கோவா மாநிலத்தில் முன்னதாக கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்த காரணத்தால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. தற்போது பாதிப்புகள் குறைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மாநில அரசு கடந்த வெள்ளிக்கிழமை புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 21 முதல் கோவாவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்றும், மாணவர்களுக்கு சீருடைகள் கட்டாயம் கிடையாது என்றும், ஆரம்ப நாட்களில் மாணவர்களுக்கு குறைந்த நேரங்களில் மட்டுமே பள்ளிகள் நடத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.63000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இது குறித்து சுற்றறிக்கையில், கல்வி இயக்குனர் பூஷன் சவைகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகளை நேரடியாக மட்டுமே நடத்தப்படும் என்றும், பள்ளி சீருடைகளை அணிந்து வர மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திங்கள்கிழமை (பிப் 21) முதல் மழலையர் தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளையும் திறக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!