சிலிண்டர் சேவை முதல் வங்கி விதிமுறைகள் வரை – ஜூலை முதல் வரப்போகும் மாற்றங்கள்!
தற்போது நடைபெற்று வரும் ஜூன் மாதம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அடுத்து வரும் ஜூலை மாதத்தில் வங்கி சேவைகள் துவங்கி கேஸ் சிலிண்டர் வரை சில முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அவை பற்றி விரிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றகள்
மத்திய அரசின் அறிவிப்பின்படி வங்கி முதல் சிலிண்டர் வரையிலான பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய சேவைகள் பலவற்றில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அந்த வகையில் ஒரு ஆண்டின் சரி பாதியில் இருக்கும், அதாவது ஜூலை மாதத்தில் இத்தகைய சேவைகளில் புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் வங்கி சேவை முதல் சிலிண்டர் வரையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த விவரங்களுடன் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – தேர்தல் வாக்குறுதி!
முதலாவது SBI வங்கியில் வாடிக்கையளர்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு புதிய கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதாவது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டில் (BSBD) சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இவை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் ATM ல் பணம் எடுப்பது, அனுப்புவது, காசோலை சேவைகள் போன்றவற்றிற்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளன.
அதன் படி SBI வாடிக்கையாளர்கள் ATM மூலம் ஒரு மாதத்தில் 4 முறை இலவசமாக பரிவர்த்தனைக்கும், அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் GST செலுத்த வேண்டும். காசோலை வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டில் 10 காசோலைகளை இலவசமாகவும், அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் 10 காசோலைகள் புத்தகத்திற்கு GST யுடன் 40 ரூபாய் கட்டணம், 25 காசோலைகள் புத்தகத்துக்கு GST யுடன் 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
தொடர்ந்து LPG சிலிண்டர் விலையும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மாற்றமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் சிலிண்டர் விலையும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்ட நிலையில், சிண்டிகேட் வங்கியின் IFSC இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் தங்கள் IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தவிர சிண்டிகேட் வங்கியின் செக்புக், ஸ்விப்ட் கோடு, MCIR கோடுகள் என அனைத்தும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக தலங்களில் ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை வரும் ஜூலை மாதம் முதல் 3,000 ரூபாய் வரை அதிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, அடுத்த மாதத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.