FD கணக்குகளில் விதிமுறைகள் மாற்றம் – RBI அறிவிப்பு! முழு விவரம் இதோ!
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, முதிர்ச்சி அடைந்த FD கணக்குகளை க்ளைம் செய்யவில்லை என்றால் அந்த கணக்குகளுக்கான வட்டியை சந்தாதாரர்கள் இழக்க நேரிடலாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்:
தற்போது நிலையான வைப்பு கணக்குகளுக்கான (FD) விதிகளில் RBI சில மாற்றங்களை அறிவித்துள்ள நிலையில் இந்த புதிய விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களாக, பல அரசு மற்றும் அரசு சாரா வங்கிகள் FDகளுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போல ரிசர்வ் வங்கி, நிலையான வைப்புத்தொகையின் (FD) விதிகளில் இப்போது ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அந்த வகையில் இப்போது முதிர்வு காலம் முடிந்த பிறகு, FD தொகையை க்ளைம் செய்யவில்லை என்றால் குறைவான வட்டியை பெறுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த வட்டி, சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டிக்கு சமமாக இருக்கும். தற்போது, வங்கிகள் வழக்கமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5%க்கும் அதிகமான வட்டியை அளிக்கின்றன. அதேசமயம் சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும். இது குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி, நிலையான வைப்பு கணக்கு முதிர்ச்சியடைந்து, தொகை செலுத்தப்படாமலோ அல்லது உரிமைகோரப்படாமலோ இருந்தால், அதன் சேமிப்புக் கணக்கின்படி வட்டி விகிதம் அல்லது முதிர்ச்சியடைந்த FDக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் எது குறைவோ அது வழங்கப்படும்.
கோவிலில் மூத்த குடிமக்களுக்கு விரைவில் தனிப்பாதை – அரசு முடிவு!
இந்த புதிய விதிகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் பிராந்திய வங்கிகளில் உள்ள டெபாசிட்களுக்கு பொருந்தும். இதற்கு முன்னதாக, உங்கள் FD கணக்கு முதிர்ச்சியடைந்த போது நீங்கள் அதை திரும்பப் பெறவில்லை அல்லது உரிமை கோரவில்லை என்றால், நீங்கள் முன்பு FD செய்த அதே காலத்திற்கு, வங்கி உங்கள் FDயை நீட்டிக்கும். ஆனால் இப்போது அப்படி நடக்காது. அதற்கு மாறாக இனி முதிர்ச்சி அடைந்த கணக்கின் பணத்தை எடுக்கவில்லை என்றால், அதற்கு FD வட்டி கிடைக்காது என்று கணக்குதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.