தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!
உடுமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 13 இல் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இரண்டு வருடமாக மாணவர்கள் தேர்வுகள் எழுதாத காரணத்தால் இந்த வருடம் கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
அமைச்சர் அறிவித்திருந்த படி, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு இந்த வருட இறுதி தேர்வு இந்த மாதம் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்வர்களுக்கு மார்ச் மாத இறுதியில் முழு ஆண்டு தேர்வு ஆரம்பித்து மே மாதம் 13ம் தேர்வு முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டன. மீண்டும் மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
உடுமலை கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள் திருத்தும் பணியிலும் அவர்கள் ஈடுபடுவர். இதையடுத்து பள்ளிகளை திறக்க குறுகிய நாட்களே இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பாதிப்படைவர். இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.