சாதியினை குறிப்பிடும் படி உள்ள அரசு பள்ளிகளின் பெயர் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
அரசு பள்ளிகளுக்கு சாதியினை குறிப்பிடும் படி உள்ள பெயர்களை மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்க உள்ளதாக பஞ்சாப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளியின் பெயர்:
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாநில அரசுகளின் மூலம் அமைக்கப்படும் அரசு பள்ளிகளுக்கு குறிப்பிட்ட மாநிலம் அல்லது மாவட்டத்தை சேர்ந்த பொது வாழ்வில் ஈடுபட்டு மக்களின் நல்வாழ்விற்காக உழைத்த நபர்களின் பெயர்கள் வைக்கப்படும். ஆனால் சில சமயம் இந்த பெயர்களுடன் அவர்களின் குறிப்பிட்ட சாதியின் பெயரும் சேர்ந்து வைக்கபட்டுள்ளது.
தரம் உயரும் சென்னை ஈசிஆர் சாலை- நெடுஞ்சாலை துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் அவர்கள், அரசு பள்ளியின் பெயரில் சாதியினை அடிப்படையாக வைத்து சூட்டப்பட்டுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சாதி பெயர்கள் இருப்பதால் பெற்றோர்கள் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில்லை. தற்போதைய கால கட்டத்தில் சாதியின் பெயரை பள்ளியின் பெயரில் குறிப்பிடுவது நாகரீகமற்ற செயலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.