தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முறைகளில் மாற்றம்? உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் இரண்டு நிலைகளில் நடைபெறும். இந்நிலையில் தேர்வு முறையை மாற்றாமல் பழைய நடைமுறைப்படியே தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தட்டச்சு தேர்வுகள்:
தமிழகத்தில் அரசு அனுமதியுடன் 3500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அந்த மையங்களில் தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வானது தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடத்தப்படும். அதில் இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் – 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் என இருக்கும்.
Exams Daily Mobile App Download
தேர்வர்கள் அதனை குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். இந்த முறையில் தான் 75 ஆண்டுகளாக இந்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளியிட்ட தேர்வு முறையில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு என மாற்றப்பட்டது. இந்நிலையில் புது முறையை ரத்து செய்துவிட்டு 75 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட முறையில் தேர்வு நடக்க வேண்டும்.
தமிழக Passport அலுவலக காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- சம்பளம் || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி நாள
என உயர் நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கம்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏற்கனவே 75 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனால் ஏற்கனவே பயின்று வரும் தட்டச்சு பயிற்சியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.