தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஓய்வூதியத்தில் மாற்றம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தங்களுக்கு கருணை ஓய்வூதியம் உயர்வு, விருப்ப ஓய்வு திட்டம், ஊதிய உயர்வு, நகை கடன், சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கடிதம் மூலமாக முன்வைத்துள்ளனர்.
ஊழியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் நீண்ட காலமாக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் இது தொடர்பாக அரசு எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Exams Daily Mobile App Download
அதனால் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 7 முதல் 9ம் தேதி வரை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர். அதன்படி தற்போது அரசு இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14% இருந்து 28% ஆக உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அத்துடன் இது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – விண்ணப்ப கட்டணம் ரூ.25 மட்டுமே! விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மேலும் கடிதத்தில்,
1. நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் 2021ம் ஆண்டில் அரசிடம் இருந்து பெற்று சொந்த நிதியில் செயல்படும் சங்கங்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
2. தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 மற்றும் 4 சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
3. மேலும் கருணை ஓய்வூதியம் மாதம் 5000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும்.
4. அத்துடன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
5. கடந்த 2006ம் ஆண்டு முதல் இப்போது வரை மாநில அரசு அறிவித்த தள்ளுபடி திட்டங்கள் மூலமாக பலநூறு கோடி கூட்டுறவு சங்களுக்கு கிடைக்க வேண்டியுள்ளது. இதனை மீட்டுத்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.