தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? வருகை கட்டாயம்? அமைச்சர் விளக்கம்!

1
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? வருகை கட்டாயம்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? வருகை கட்டாயம்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? வருகை கட்டாயம்? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் வரும் நவ.1 ம் தேதி பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் பள்ளிகள் வரும் 1ம் தேதி கட்டாயம் திறக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

வருகை கட்டாயம் இல்லை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் கடந்த செப்.1ம் தேதி 9 – 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் ஆலோசனையின் முடிவாக நவ.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்தனர். ஒரு சிலர் அடுத்த 2 நாட்களில் தீபாவளி வருவதால் தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

TNPSC 2021 குரூப் 1, 2 & 4 VAO தேர்வுகள் – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

ஆனால் யாருக்கும் செவிசாய்க்காமல் முதலமைச்சர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதை தெரியப்படுத்தி வருகிறார். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு முகக்கவசம் இருப்பு, சானிடைசர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் தீபாவளி முடிந்து பள்ளிகள் திறக்கலாம் என்று கோரினர். அதற்கு நேற்று செய்தியார்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் வரும் நவ.1ம் தேதி திறக்கப்படுவது உறுதி என்று கூறியுள்ளார்.

6 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திட்டம்!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 31 ஆயிரம் பள்ளிகளில் 34 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களின் கற்றல் நிமித்தமாகவே இந்த பள்ளிகள் திறக்கும் முடிவு. ஆனால் மாணவர்கள் வருகை கட்டாயம் இல்லை. பெற்றோர்கள் விரும்பினால் தீபாவளி முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களது கற்றலை மேம்படுத்தும் விதமாக ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்பு மாலை 5 மணி முதல் 7 மணிவரை நடத்தப்படும். அவ்வாறு கற்றலை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் இந்த வகுப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. பள்ளிகளை திறப்பதில் அரசு ஏன் பிடிவாதம் காட்டுகிறது. தீபாவளி முடிந்து திறப்பது நல்லது… பஸ் மற்றும் வாகன கூட்ட நெரிசல் தவிர்க்கலாம்… Corana பரவலை குழந்தைகளுக்கு வராமல் பாதுகாக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!