தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறக்கும் நாளில் மாற்றம்!
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்து விட்டது. அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கும் நாளை மாற்றி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறக்கும் நாள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் பின்னர் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியில் பொதுத்தேர்வு ஆரம்பமாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது.
ஜூன் 1 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!
இருப்பினும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று வரை பள்ளி வேலை நாளாக செயல்பட்டது. இதனால் இன்றிலிருந்து மே ஜூன் 12ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.