ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் – அரசு தீவிர நடவடிக்கை!

0
ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் – அரசு தீவிர நடவடிக்கை!

தமிழக ரேஷன் கடைகளில் வரும் 2024 ஜனவரி மாதம் முதல் அதிரடியான புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிரடி மாற்றங்கள்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருள்கள் தொகுப்பை பெற்றுக் கொள்ள முடியும். கடந்த 2016 ஆம் ஆண்டு ரேஷன் அட்டைகளில் கணினி மைய ஒருங்கிணைப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் தொடங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்த காலம் 2021 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மேலும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தமிழக அருவியில் குளிக்க தொடரும் தடை – கனமழை நீடிப்பு!

ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளில் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள்களை வழங்குவதற்கு இரண்டாம் கட்ட கணினி மய பதிவுகள் மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கான பில்களை பிரிண்டர் மூலம் வழங்கும் பணிகள் 2024 ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது. கைரேகை பதிவு முறை காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் நிலையில் கருவிழி பதிவு முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் 2024 மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு அரசு திட்டமிட்டு பணிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!