ஜூலை 14 வரை ராமேஸ்வரம் வழி செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே!
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மண்டபம் – ராமேஸ்வரம் இடையே செல்ல கூடிய ரயில் வரும் 14ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் வழி ரயில் சேவைகள்:
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு காரணங்களால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. முதலில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பயணிகள் வருகை இன்றி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பொது போக்குவரத்து பயணங்களை தவிர்த்தனர். பயணிகள் இல்லாமல் ரயில்களை இயக்குவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டது அதனால் தற்காலிகமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 25% பென்ஷனுடன் பழைய ஓய்வூதிய திட்டம் – விரைவில் முக்கிய அறிவிப்பு?
மேலும் கடந்த மாதங்களில் ஏற்பட்ட புயல்கள் காரணமாகவும், தென்மேற்கு பருவ மழைப்பொழிவு காரணமாகவும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது மண்டபம் – ராமேஸ்வரம் இடையே செல்லக்கூடிய ரயில்கள் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டது. நேற்று இரவு 7.15 மணிக்கு புறப்பட்ட எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மற்றும் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இன்று இரவு 8.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை 5.10 மணிக்கு ராமேஸ்வரம் – எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக ரயில்கள் ராமேஸ்வரம் வரை செல்வது ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.