தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாற்றம் – தேர்வு வாரியம் அறிவிப்பு!
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை ஆசிரியர் தகுதி வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 1030 முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில், ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடை குறிப்பின் மீது வாட்ஸ்அப் மூலம் ஆட்சேபனைகளை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது. அப்போது 29,141 விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். பகுதி பாடவாரியாக மட்டுமே பாட வல்லுனர்கள் அழைக்கப்பட்டு விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி மே மாதம் 10ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கு அந்த தேதிகளில் அனுப்பியவர்களின் விவரங்கள் ஆட்சேபனைகள் பாடவாரியாக பெறப்பட்டது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு
மேலும், இறுதி விடைக்குறிப்புகள் இணையதளத்தில் ஜூலை 4ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் செய்து, முன்பு நடத்தப்பட்ட தேர்வின் மூலம் கூடுதலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. அதாவது தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் மேலும் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், இதன் மூலம் 3237 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.