தமிழகத்தில் காவலர்கள் தேர்வு முறையில் மாற்றம் – முழு விவரம் இதோ!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர்களுக்கான தேர்வு முறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு ஆகியவற்றில் கடைபிடிக்கப்பட இருக்கும் புதிய விதிகள் தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
தேர்வு முறை
தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் இதுவரை 8,047 உதவி ஆய்வாளர்கள், 1,06,881 இரண்டாம் நிலை காவலர்கள், 3,983 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், 6,460 தீயணைப்பாளர்கள், 10,099 தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வு செயல்முறை எழுத்து மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செயல்முறையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது ஒரு சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி புதிய காவலர்களுக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காவலர் பணிக்காக நடத்தப்படும் தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களில், எழுத்துக்கு 70 மதிப்பெண்களும், உடல் தகுதித்தேர்வுக்கு 24 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களாக 6 மதிப்பெண்களும் வழங்கப்பட இருக்கின்றன.
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!
இதை தொடர்ந்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகிய மூன்றிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் கயிறு ஏறுதலில் தோல்வியடைந்தால் நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகிய தோ்வுகளில் பங்கேற்கலாம். மேலும், இந்த 3 தேர்வில் பங்குபெற்ற பின்னர் ஒட்டு மொத்தமாக உடல் திறன் தேர்வின் மொத்த மதிப்பெண்களை எடுத்து அதனை எழுத்து தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து 1:2 என்ற விகிகத்தில் உத்தேச தேர்வு பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உடல் திறன் தேர்வில் ஏதேனும் ஒன்றில் மதிப்பெண்கள் சரியாக பெற முடியவில்லை என்றால், அடுத்த இரு தோ்வுகளிலும் மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இது தவிர, உடல் திறன் தேர்வில் இனி ஒரு நட்சத்திரத்துக்கு 4 மதிப்பெண்களும், இரண்டு நட்சத்திரங்களுக்கு 8 மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.