தமிழகத்தில் மெட்ரோ ரயில் கட்டணங்களில் மாற்றம் – நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில்களிலும் ரயில்வே நிர்வாகத்தை போல் ஒரே மாதிரியான கட்டணங்களை வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மெட்ரோ ரயில் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டம்:
தமிழகத்தில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மிகப்பெரிய நகரமான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து, மக்கள் அவர்கள் வேலைகளை விரைவாக செய்து வருகின்றனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மெட்ரோ ரயில்களில் இந்திய ரயில்வே நிர்வாகத்தை போல் ஒரே மாதிரியான கட்டணங்களை வசூலிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அந்தந்த நகரங்களுக்கு ஏற்றவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை உட்பட 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 19 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேஷ்டி, சேலைகள் – அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மெட்ரோ ரயில் கட்டணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், ரயில்வேயில் இருப்பது போல் கிலோ மீட்டர் துாரத்தை கணக்கிட்டு அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும், சிறிய நகரங்களுக்கு குறைவான கட்டணமும் நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறியுள்ளார்.