அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? முழு விவரம் இதோ!

0
அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? முழு விவரம் இதோ!
அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? முழு விவரம் இதோ!
அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? முழு விவரம் இதோ!

இந்தியாவில் அரசு பணியாளர்களுக்கு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் முதலீட்டின் உச்சவரம்பு நீக்குவதற்கான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

ஓய்வூதிய திட்டம்

இந்தியாவில் அனைத்து பணியாளர்களுக்கும் EPFO நிறுவனம் ஓய்வூதிய பலன்களை வழங்கி வருகிறது. இதையடுத்து இந்நிறுவனத்தின் கீழ் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். ஊழியரின் மாதாந்திர சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் செலுத்தப்படும். இதில் அதிகபட்சமாக ரூ.15000 வரை பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் ஓய்வு பெறும்போது மாதந்தோறும் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1250 வரை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் இதில் 8.33% ஒரு பகுதி இபிஎஸ்க்கு செலுத்தப்படுகிறது.

இதன் மூலமாக ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.7500 வரை வழங்கப்படுகிறது. மேலும் பணியாளர்கள் ஓய்வூதியத் திருத்தத் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 1, 2014க்கு முன் இபிஎஸ்க்கு பங்களிக்கத் தொடங்கியிருந்தால், ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் அதிகபட்ச மாதச்சம்பள வரம்பு ரூ.6500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் செப்டம்பர் 1, 2014க்கு பின் இபிஎஸ்க்கு அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்வு – பள்ளிக்கல்வித்துறை தகவல்!

Exams Daily Mobile App Download

மேலும் ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்ய வேண்டும். மேலும் ஊழியர் ஒருவர் 20 ஆண்டுகள் பணியில் நிறைவு செய்துள்ளார் எனில் அவருக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய விதிமுறைப்படி, ஊழியர் ஒருவர் எத்தனை வருடங்கள் பணி புரிந்தாலும் அவர்களின் ஓய்வூதியம் அதிகபட்சமாக ரூ.15000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உச்ச வரம்பு நீக்கப்பட்டால் ஓய்வூதியம் இரட்டிப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!