தமிழக ரேஷன் கார்டு பெறுவதற்கான கட்டணத்தில் மாற்றம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்துவதற்கான முறை இன்னும் அமலுக்கு வராமல் உள்ளதால், பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வலுத்து வருகிறது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் தற்போது அரசு சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகள் மற்றும் சேவைகளும் ஆன்லைன் முறையில் செய்வதற்கான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் அரசு அலுவலங்களை நோக்கி பட எடுப்பது குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனா கால ஊரடங்கு நேரத்திலும் கூட அரசு காரியங்கள் பலவற்றை மக்கள் செய்து வந்தனர். அரசு துறை சேவைகளை மக்கள் பெற எளிதாக இருக்கும் வகையில், இதற்கான தனிப்பட்ட இணையத்தளங்களை அரசு பராமரித்து வருகிறது.
மக்கள் அரசு இ- சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் வழியான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், தற்போது பலருக்கும் பயனுள்ளதாக இருப்பது ஆன்லைன் முறையில் புதிய ரேஷன் கார்டினை பதிவு செய்வது ஆகும். இதன் மூலம் புதிதாக அல்லது தொலைந்து போன பழைய ரேஷன் கார்டின் பிரதியை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
Twitter தளத்தில் இந்தியர்களுக்கான புதிய அப்டேட் – அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு குறிப்பிட்ட முறையில் விண்ணப்பிக்கும் போது தபால் வழியாக கார்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். முன்னதாக நேரடியா அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டின் நகலை பெற ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், ஆன்லைன் முறையில் பதிவு செய்து பெறுவதற்கு, தபால் கட்டணம் ரூ.25, ரேஷன் கார்டிற்கு ரூ.20 இரண்டையும் சேர்ந்து ரூ,45 செலுத்த வேண்டும். மிகவும் எளிய முறையான ஆன்லைன் வழியில் பணம் செலுத்தி ரேஷன் கார்டு பெறும் முறை இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால், மென்பொருள் தயாரிப்பு பணி நடக்கிறது. இந்த பணி முடியும்தருவாயில் இருப்பதால், விரைவில் இணையதளத்தில் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்