ஜூன் 13 முதல் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு சண்டிகர் மாநிலத்தில் ஜூன் 13ம் தேதி முதல் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
சண்டிகர் மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி, ஜூன் 13 அன்று காலை 5 மணி முதல் ஜூன் 14 காலை 5 மணி வரை முழு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இருப்பினும், ஒரு பகுதியாக பல பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர அரசு அனுமதித்துள்ளது. மேலும் பால், ரொட்டி, காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி? அரசு விளக்கம்!
காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 அன்று, சண்டிகர் நிர்வாகம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது, அனைத்து கடைகளையும் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதித்து மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை குறைத்துள்ளது. அனைத்து உணவகங்கள், பார்கள், ஜிம்கள், கிளப்புகள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
TN Job “FB Group” Join Now
நகரில் இரவு ஊரடங்கு உத்தரவு தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். முன்னதாக, இரவு ஊரடங்கு உத்தரவு மாலை 6 மணி முதல் வார நாட்களில் அதிகாலை 5 மணி வரை இருந்தது. ஷாப்பிங் மால்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்றும், மால்களுக்குள் செயல்படும் உணவகங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.