மே 8 காலை 5 மணி முதல் வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!!
பஞ்சாப் தலைநகரான சண்டிகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக அம்மாநில அரசு வார இறுதி ஊரடங்கை இன்று (மே 8) முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக வேகத்தில் பரவி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பாதிப்புகளில் இந்தியாவில் மட்டும் 46% ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிப்புகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களில் உள்ள தொற்று பரவல் நிலையை பொறுத்து ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து மாநில அரசுகளும் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அம்மாநில அரசு அங்கு, மே 8ம் தேதியான இன்று காலை 5 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
nice post