24 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
சண்டிகரில் கொரோனா காரணமாக வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு:
சண்டிகர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2 இறப்புகள் மற்றும் 66 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் 60,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு – இலவச பயிற்சி!
இதுவரை 783 பேர் மாநிலத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சண்டிகரில் நாளை முதல் 24 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. அதன்படி, ஜூன் 13 காலை 5 மணி முதல் ஜூன் 14 காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தளர்வுகள்:
- ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவின் போது, அத்தியாவசிய சேவைகள் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படும். மற்ற நாட்களில், மாலை 6 மணி வரை கடை திறந்திருக்கும்.
- அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்கள் உரிய அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
- மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
- மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
- வீட்டு விநியோகங்களுக்கு இரவு 10 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கலாம்.
- செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, உணவகங்கள், பார்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இரவு நேர ஊரடங்கு நேரம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.