தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கூறியுள்ளார்.
குடும்ப அட்டைதாரர்கள்:
பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் சர்க்கரை அட்டைதாரர்கள் பலர் தங்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5000 – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பேசுகையில், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை பாதுக்காக்க குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன் பின்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், தனி நபர் குடும்ப அட்டை வழங்கவும், சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
பின்னர் இறுதியாக பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்ற பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் ரத்து செய்யப்பட்டுள்ள தனிநபர் குடும்ப அட்டைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளது. மண்ணின் தரத்திற்கேற்ப உரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.