தமிழக மக்களே மிகக்கவனம்…. இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய வானிலை நிலவரத்தை குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TMB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய எச்சரிக்கை! இதை மட்டும் செய்யாதீங்க!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இதே போன்று தமிழகத்தில் விருதுநகர், நெல்லை, கரூர், மதுரை, நாமக்கல், திருச்சி, ஈரோடு, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இன்று முதல் 22ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று முதல் 22ம் தேதி வரை லட்ச தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்