இந்த பகுதியிலுள்ள மக்களே உஷார்…28ம் தேதி வரை மழை இருக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!

0
இந்த பகுதியிலுள்ள மக்களே உஷார்...28ம் தேதி வரை மழை இருக்கும் - வானிலை மையம் அறிவிப்பு!
இந்த பகுதியிலுள்ள மக்களே உஷார்...28ம் தேதி வரை மழை இருக்கும் - வானிலை மையம் அறிவிப்பு!
இந்த பகுதியிலுள்ள மக்களே உஷார்…28ம் தேதி வரை மழை இருக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்‌ பகுதிகளில்‌ கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது பாதுகாப்பாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 24.09.2022 முதல்‌ 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான பெய்யக்கூடும்‌.

27.09.2022 மற்றும்‌ 28.09.2022 வரை : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தமிழகத்தில் கொரோனா போல ஃப்ளூ காய்ச்சல் பரவ கூடாது – அரசு எடுக்கும் தீவிர நடவடிக்கை!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24.09.2022: தென்‌ தமிழக கடலோர பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, இலங்கை கடற்கரையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!