தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடை காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். சராசரியாக வெயில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிந்து வருகிறது. கடந்த மாதம் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது.
Exams Daily Mobile App Download
நடப்பு ஆண்டு கோடை காலத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னையில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்கள் கவனத்திற்கு – கலந்தாய்வு குறித்த அறிவிப்பு!
மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மே 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.