மக்களே உஷார்…தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

0
மக்களே உஷார்...தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!
மக்களே உஷார்...தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!
மக்களே உஷார்…தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதே போல் இன்று முதல் 23ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 21.09.2022 முதல்‌ 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அசுர வேகத்தில் குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல் – பள்ளி விடுமுறை நீட்டிப்பு? பெற்றோர்கள் அச்சம்!

24.09.2022 மற்றும்‌ 25.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

21.09.2022 முதல்‌ 23.09.2022 வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழககடலோர பகுதிகள்‌, இலங்கை கடற்கரையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!