தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று வெப்பச்சலனம் காரணமாக 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னையில் சுற்றி உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மாஸ்க் அணியவில்லை எனில் அபராதம் – கொரோனா பரவல் எதிரொலி!
இன்று முதல் நான்கு நாட்களுக்கு லட்சத்தீவு பகுதி, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், புதுவை, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.