தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

ஆந்திரப்பகுதிகளின் மேல்‌ நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்கக் கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

ஆந்திரப்பகுதியின் மேல்‌ நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று ஜூன் 6 தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர், வேலூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்யக்கூடும்‌. இதை தொடர்ந்து மேலும் நாளை ஜூன் 7, ஜூன் 8 மற்றும் ஜூன் 9, 10ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், அந்நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

  • இன்றைய நாளான ஜூன் 6ல் மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌.
  • அதுபோலவே நாளை ஜூன் 7 அன்று பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்மேற்கு வங்ககடல்‌ பகுதிகளிலும், மத்திய கிழக்கு மற்றும்‌ தென்கிழக்கு அரபிக் கடலோரப்பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

1 முதல் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 22ம் தேதி வரை கோடை விடுமுறை!

  • மேலும், ஜூன் 8 மற்றும் ஜூன் 9, 10 களில் வடக்கு கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
  • இவ்வாறு மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!