தமிழகத்தில் இன்று (ஜூலை 12) கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஜூலை 12) கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இது தவிர ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய முதல் நாள் துவங்கி பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அணைக்கட்டுகள், நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பக் கூடிய சூழல் நிலவுகிறது. மேலும், தற்போது நிரம்பியிருக்கும் நீர் தேக்ககங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது கனமழை எதிரொலியாக சில மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கூட பருவமழை தற்போது தீவிரமடையத் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரைக்கும் பெய்திருந்தது. தவிர மற்ற மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பரவலான அளவுக்கு மழை பெய்தது.
தமிழக பள்ளிகளில் இனி வேலைவாய்ப்பு பதிவு முறை கிடையாது – அரசு திடீர் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஜூலை 12) கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த இடங்களில் மிதமானது முதல் கனமழை வரைக்கும் இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.