அடுத்த 5 நாட்களுக்கு பலத்த கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை என்பதால் கடந்த சில நாட்களாகவே பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மேலும் 5 நாட்களுக்கு பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை
மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், புதுவை, கேரளா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கேரளா மாநிலம் முழுக்க அடுத்த 5 நாட்களுக்கு பலத்த கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மலையோரம் உள்ள மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கேரளா மாநிலம் முழுக்க தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த வெள்ள பெருக்கில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், தொடர் கனமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள வீடுகள் இடிந்து, மண்சரிவில் சிக்கி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் மண்சரிவில் சிக்கி ஆறு பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் ஆதார் அட்டை செல்லாது? மத்திய அரசின் முக்கிய விளக்கம்!
எனவே, வெள்ளத்தினால் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்காக மலையோர மாவட்டங்களில் மட்டும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிவாரணம் முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவருமே நிவாரண முகாம்களில் தான் வசித்து வருகின்றனர். மேலும், 5 நாட்களுக்கு கனமழை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.