தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – சான்றிதழ் வழங்கல் துவக்கம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி தற்போது வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை விதி 110 என்பதன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு விவசாயத்திற்காக நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை வழங்கப்படுமா?
ஆனால் இந்த தள்ளுபடி விவாகரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. மேலும் இந்த முறைகேட்டில் வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் தகுதியான நபர்களை ஆராய்ந்து அதன் பின்னர் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்கு 48,84,726 பேர் விண்ணப்பித்தனர். இதில் 35,37,693 பேர் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தள்ளுபடி பெற தகுதியான நபர்களுக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் முடிந்த பிறகு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் நடைபெற துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள தள்ளுபடி பெற தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.