PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு – தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு - தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு - தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு – தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். இப்போது தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழகத்தில் 2020-2021ம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1 உள்ளிட்ட பணியிடத்திற்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை கணினி வழித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு மூலமாக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் 2 முதல் 4ம் தேதி வரை 17 பாடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு, 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG), முதுகலைப் பட்டம் (PG) கல்வியியல் இளங்கலை பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் உள்ளிட்ட படிப்புகளில் தமிழ் வழியில் பயின்றால் அதற்குரிய அனைத்து சான்றிதழையும் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். இதனை தொடர்ந்து இதனை அடிப்படையாக கொண்டு 11 பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா? இனி அந்த பிரச்சனை இல்லை! அக். 1 முதல் புதிய விதி அமல்!

Exams Daily Mobile App Download

அத்துடன் இதற்கான பெயர் பட்டியலை  http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் இதில் இன்னும் சில தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். அதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத நபர்கள் தங்களின் சான்றிதழை நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக இன்றும் நாளையும் (செப்.19, 20) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!