பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து முக்கிய தகவலை என்ஜினீயரிங் கவுன்சிலிங் அறிவித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பயன்பெறும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங்:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் செயல்படாமல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, மற்றும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறையத் தொடங்கியது. பின்பு தொற்று குறையத் தொடங்கியதும் பகுதி நேரமாக பள்ளிகள் இயங்கத் தொடங்கியது. அதே போல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது, அதன்படி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதே போல் கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளுக்கான இறுதி பட்டியல் – இன்று வெளியீடு
இந்த நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கியது. தற்போது கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வரும் நிலையில், பதிவேற்றம் செய்த சான்றிதழ்களில் தவறு செய்தவர்கள் திருத்தும் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நிலையை பார்த்து கொள்ளுமாறு என்ஜினீயரிங் கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.