TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – இன்று முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி!
தமிழகத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற்றது. இதில் விடுபட்டவர்கள் இன்று முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் பதிவேற்றம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்கள் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏராளமானோர் இத்தேர்வெழுத விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்ததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – அதிரடியாக உயர்ந்த விலை!
அதன் பிறகு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்புகள் குறைய ஆரம்பித்ததும் ஒத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 2021 டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வானது கணினி வழியாக நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 2022 மார்ச் மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனை பின்பற்றி தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தொடங்கினர்.
Exams Daily Mobile App Download
அப்போது சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக தேர்வர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதன்படி, மாற்று சான்றிதழில் நன்னடத்தை குறிப்புடையவர்கள் மட்டும் அந்த சான்றிதழை பதிவேற்றவும், மற்றவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனத்தில் நடத்தை சான்றிதழ் பெற்று பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட தேர்வர்கள் அதாவது கோரிக்கை ஏற்கப்பட்ட தேர்வர்கள் இன்று முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 31ம் தேதி வரை இணையதளத்தில் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றலாம் செய்ய அனுமதி அளித்துள்ளது.