அஞ்சல் துறை மூலம் டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழ்? எளிய வழிமுறைகள் இதோ!
ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க பல வழிமுறைகள் இருந்தாலும் அஞ்சல் துறை ஊழியர்கள் மூலம் மிக ஈஸியாக வாங்கி கொள்ளலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த விபரங்களை காண்போம்.
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
மத்திய மற்றும் மாநில துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கி வருகின்றன. இந்த ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் மாதம் ஒரு முறை தங்களது வாழ்நாள் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிப்பது அவசியமான ஒன்று. அப்படி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் பெரும் போது பல சிக்கல்கள் ஏற்படும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பரவலின் காரணமாக நேர்காணல் இன்றி ஜீவன் பிரமான் ஆன்லைன் மூலமாக சான்றிதழ்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் ஓய்வூதியம் பெறுவோர், டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் சிரமத்தை குறைக்க அவரவர் வீட்டில் இருந்தே, அஞ்சல் துறை ஊழியர்கள் மூலம் எளிமையாக சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Post Office ன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 40 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
அதன்பின், ஓய்வூதியதாரர்களின் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண்ணுடன் கைரேகை ஆகியவை குறிப்பிட்டால், சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று எண், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். அந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்று எண்ணை பயன்படுத்தி இணையதள மையத்தின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, மாநில மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.