தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – CEO அறிக்கை!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஆசிரியர்களுக்கான முக்கிய விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணாவர்களுக்கு கல்வி டிவி வாயிலாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக முதன்மை கல்வி அலுவலர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளார்.
Infosys, TCS, Wipro, HCL நிறுவனங்களில் 1.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!
இதுவரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணிக்கு வந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். கல்வி தொலைக்காட்சி வகுப்பு நடைமுறை பதிவேடுகளை அனைத்து ஆசிரியர்களும் வைத்திருக்க வேண்டும். வாட்ஸ்அப் குழு மூலம் தினசரி செயல்பாடுகளை தெரியப்படுத்த வேண்டும். தொலைபேசி இல்லாத மாணவர்களின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்களின் பட்டியலையும் வைத்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் கல்வி டிவி கண்காணிப்பு பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அனைத்து பள்ளிகளிலும் கால அட்டவணை குறித்த பலகையை வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் கூடுதலாக வழங்கப்பட்ட புத்தகங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இலவச பதிவேடுகளை முடித்திருக்க வேண்டும். FIT INDIA மொவேமென்ட் சான்றிதழை ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பட்டியலை பள்ளி அலுவலகத்தில் உரிய காரணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.