Airtel வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை எப்போது? தலைவர் விளக்கம்!
ஏர்டெல் நிறுவனமானது தற்போது தான் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை பல கோடி மதிப்பில் ஏலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில், Airtel வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவைக்கு பிரீமியம் வழங்கப்படுவது குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
5G சேவை:
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் 5ஜி அலைக்கற்றையை 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெற்றுள்ளது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய முன்னணி நிறுவனங்களும் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில், ஏர்டெல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் குப்தா ஏர்டெல் நிறுவனமானது தனது 5ஜி சேவைக்கு பிரீமியத்தை வசூல் செய்யாது எனவும், அதிக விலையிலான கட்டணத் திட்டங்களை பயன்படுத்துபவர்களுக்கு பிரீமியம் வசூல் செய்யப்படலாம் என கூறியுள்ளார்.
மேலும், இனி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக திட்டங்களில் 5G சேவை கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், அதிவேகமான இணையதள வசதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5ஜி சேவையின் மூலமாக ஏர்டெல் நிறுவனத்திற்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், 5ஜி சேவை வழங்கப்படுவதால் ரீசார்ஜ் கட்டணமும் அதிகரிக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ப்ரீபெய்ட் கட்டணம் 20-25% அளவுக்கு உயர்த்தப்பட்டது.
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? இதோ ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள்!
இந்நிலையில், மேலும் கட்டணங்களை உயர்த்தப்போவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலமாக 5G டவர் நிறுவனங்களுக்கு பெரிய வளர்ச்சியை கொடுக்கும் எனவும் ஏர்டெல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் குப்தா தெரிவித்துள்ளார். மேலும், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகள் உட்பட அனைத்து நகரங்களிலும் 5G சேவையை கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீவிர முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்