இந்தியாவில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு – மத்திய அமைச்சகம் தகவல்!!

0
இந்தியாவில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - மத்திய
இந்தியாவில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - மத்திய
இந்தியாவில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு – மத்திய அமைச்சகம் தகவல்!!

இந்தியாவில் சுமார் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார். இதற்காக 8 ஆயிரம் பெட்டிகள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள்

இந்தியாவில் இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில்களில் ஒன்று வந்தே பாரத். இந்த ரயில் சேவையானது, மும்பை, டெல்லி, சென்னை, ஹவுரா உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இப்படி இருக்க, வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கத்தோடு மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சென்னை மெட்ரோ நிலையங்களில் 1000 பேட்டரி வாகனங்கள் இயக்கம் – நிர்வாகம் தகவல்!!

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், படுக்கை வசதிகள் கொண்ட 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்களை தயாரிக்க சுமார் 8 ஆயிரம் பெட்டிகள் வரை தேவைப்படும் என தெரிவித்துள்ளார். இப்போது, மத்திய அரசின் நடவடிக்கையின் கீழ் வந்தே பாரத் ரயில் சேவைகள் துவங்கப்பட்டால், போக்குவரத்து சிக்கல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!