மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட 20 மத்திய பொது சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள 20 மாவட்டங்களுக்கு இந்தக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களைக் காணலாம்:
- மும்பை, மகாராஷ்டிரா
- அகமதாபாத், குஜராத்
- தில்லி (தென்கிழக்கு)
- இந்தூர், மத்தியபிரதேசம்
- புனே, மகாராஷ்டிரா
- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
- தானே, மகாராஷ்டிரா
- சூரத், குஜராத்
- சென்னை, தமிழ்நாடு
- ஹைதராபாத், தெலங்கானா
- போபால், மத்தியபிரதேசம்
- ஜோத்பூர், ராஜஸ்தான்
- தில்லி (மத்திய)
- ஆக்ரா, உத்தரப்பிரதேசம்
- கோல்கட்டா, மேற்குவங்கம்
- கர்னூல், ஆந்திரபிரதேசம்
- வதோதரா, குஜராத்
- குண்டூர், ஆந்திரபிரதேசம்
- கிருஷ்ணா, ஆந்திரபிரதேசம்
- லக்னோ, உத்தரபிரதேசம்
இந்த மாவட்டங்கள் / நகரங்களுக்குள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு இந்தக் குழுக்கள் ஆதரவு அளிக்கும். மாநில அரசுகளுக்கும் உதவி செய்யும்.