மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) முடிவுகள் வெளியீடு – தேர்ச்சி சதவீதம் குறைவு!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்த நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கும். மத்திய இடைநிலை கல்வி வாரியம் மத்திய ஆசிரியர் தேர்வை நடத்துகிறது. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு மற்றும் மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மத்திய அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் 1-8ம் வகுப்பு ஆசிரியராக சேருவதற்கு சி- டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஜூலை மாத சி-டெட் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இத்தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி நாடு முழுவதும் உள்ள 135 முக்கிய நகரங்களில் நடந்தது. தேர்வின் முடிவுகளை சிபிஎஸ்சி வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வின் முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
தேர்வு முடிவுகள்:
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில் 4,14,798 பேரும், இரண்டாம் தாளில் 2,39,509 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் தேர்வின் முதல் தாளை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், இரண்டாம் தாளை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ள https://ctet.nic.in/, https://cbse.nic.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்