பழங்கால வாகனங்கள் பதிவு – மத்திய சாலை போக்குவரத்து துறை புதிய நடவடிக்கை!
பழங்கால வாகனங்களை பாதுகாப்பதற்காக, அதன் பதிவு நடவடிக்கைகள் முறைபடுத்தப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பழங்கால வாகனங்கள் பதிவு :
இந்தியாவில் பழங்கால வாகனங்களை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். சில வாகனங்கள் மக்களின் பார்வைக்காக கண்காட்சியிலும் வைக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பழங்கால வாகனங்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் இல்லாததால் தற்போது இந்த வாகனங்களை பாதுகாக்கும் நடைமுறைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவில் பழங்கால வாகனங்களை பாதுகாப்பதை மத்திய போக்குவரத்து துறை நோக்கமாக கொண்டுள்ளது.புதிய பதிவுக்கு VA என்ற தனித்துவமான பதிவு குறியீட்டுடன் எண்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
“மீண்டும் இணையும் பாரதியும் கண்ணம்மாவும்” – நெகிழ்ச்சியான தருணங்களுடன் இன்றைய எபிசோட் !
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை புதுப்பிக்கும் அம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பழங்கால வாகனங்களின் பதிவு நடவடிக்கையை முறைப்படுத்துவதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் CMVR 1989 விதிகளை திருத்தியுள்ளது. இதன்படி 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இருசக்கர / 4 சக்கர வாகனங்கள் ஒரிஜினல் வடிவில் எந்த கணிசமான மாற்றமும் செய்யப்படாமல் பராமரித்து வைத்திருந்தால் அவை வின்டேஜ் வாகனங்கள் என வகைப்படுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்த வாகனங்களுக்கான பதிவு சான்றிதழை அம்மாநில அரசுகள் 60 நாட்களுக்குள் வழங்கும். மேலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பழைய ஆர்.சி ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். பழங்கால வாகனங்களை புதிதாக பதிவு செய்ய ரூபாய் 20,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. அதே போல் வாகனங்களின் மறு பதிவு கட்டணம் ரூபாய் 5000 ஆக உள்ளது. பழமையான வாகனங்களை தனி பயன்பாட்டிற்கோ, வணிக பயன்பாட்டிற்கோ சாலைகளில் இயக்க கூடாது என மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.