மத்திய கப்பல்படை தளத்தில் வேலைவாய்ப்பு – 338 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
மும்பையில் கப்பல் படை தளத்தில் பல்வேறு பணியிடத்தில் உள்ள 338 டிரேடு ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது மும்பையில் கப்பல் படை தளத்தில் உள்ள எலக்ட்ரீசியன், மெக்கானிக் டீசல், மரைன் இன்ஜின் பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், வெல்டர் (கேஸ், எலக்ட்ரிக்), பைப் பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தில் தகுதியான நபர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.08.2001 முதல் 31.10.2008 வரை பிறந்தவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வு மும்பையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.davp.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் http://www.davp.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இப்பணியில் 338 காலிப்பணியிடங்களை உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.