இந்தியாவில் அதிரடியாக குறைந்த பெட்ரோல் விலை – மத்திய அமைச்சர் விளக்கம்!
நாடு முழுவதும் சர்வதேச சந்தை கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்
பெட்ரோல் விலை:
இந்தியாவில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களில் பெட்ரோலும் ஒன்றாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையும் ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. பெட்ரோல் விலை எந்த அளவிற்கு அதிகமாக உயர்ந்தாலும் அதன் தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை கட்டாயம் வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அந்த வகையில் இந்தியா எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியில் லோகோ வெளியிட்ட பின் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது பேசிய அவர் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட 40% பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்காமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதன் படி இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குழந்தை நலக் குழுமம் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.11,916 ஊதியம்!
மேலும் சவுதியில் எரிவாயு விலை கடந்த 24 மாதங்களில் கிட்டத்தட்ட 303% அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் எரிவாயு விலை அந்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு குறைவாக அதாவது 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் நிகழும் ஏற்ற இறக்கத்தை குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்