இந்தியாவில் குறையும் கொரோனா பரவல் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் அதிகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 20 நாளாக குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. மின்னல் வேகத்தில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றிக்கொள்கிறது. கடந்த வருட மார்ச் மாதம் பரவத் தொடங்கிய வைரஸ் தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது பரவி வரும் வைரஸ் உருமாறிய கொரோனா வைரஸ் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஆய்வறிக்கை வெளியீடு!!
ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. பலி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. உயர்ந்து வரும் உயிரிழப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தடுப்பு நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. மாநிலங்களில் ஊரடங்குகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், புதிதாக தொற்றுக்கு ஆளாவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என கூறினார். தொற்று பாதிப்பு விகிதம் 9.79% ஆக குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்தார். மே 17-ம் தேதியில் இருந்து இந்தியாவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது. நாட்டில் 24 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. நாட்டில் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 90.01% ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.