மத்திய அரசின் உதவித்தொகை.. விண்ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் – பெறுவது எப்படி?
தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்து தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
2008 – 2009ம் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு நாடு முழுவதும் சிறுபான்மையின மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. முழுவதுமாக மத்திய அரசின் நிதியின் மூலம் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இந்த உதவித்தொகையானது செலுத்தப்படும். இதற்கு தேர்வு செய்யப்படுவதற்கு மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். மேலும், மாணவரின் பெற்றோர்கள் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மதுரையில் நாளை (26.09.2022) பவர் கட் – உங்க ஏரியா இந்த லிஸ்ட்ல இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
Exams Daily Mobile App Download
மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறுவதற்கு முதலில், www.scholarship.gov.in என்ற இணையத்தில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றி பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு பாஸ் போர்ட் அளவு புகைப்படம்; வருமானச் சான்றிதழ்; சிறுபான்மையினர் என்பதற்கான வகுப்புச் சான்றிதழ்; ஆதார் எண்; வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC Code; போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாணவர்கள் இந்த உதவித்தொகையினை பெற வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்