மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – நவ.30-க்குள் பணம்! வெளியான தகவல்!
இந்தியாவில் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்மையில் 12 – வது தவணை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதில் சிலருக்கு பணம் வந்து சேரவில்லை என்று புகார் அளித்தனர்.
பிம் கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் நோக்குடன் 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் விவசாயிகளிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய் 2,000 வீதம் ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தொகையானது நேரடியாக மத்திய அரசால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கிசான் திட்டத்தின் 12 – வது தவணைத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் சிலருக்கு பணம் வரவு வைக்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து காரணம் கேட்டறிந்த போது வங்கி கணக்கில் eKYC செய்யப்படாத விவசாயிகளுக்கு பணம் வராது என்று கூறுகின்றனர்.
மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் – மாநகராட்சியின் முக்கிய உத்தரவு.. மீறினால் புகார் அளிக்கலாம்!
Exams Daily Mobile App Download
அதனால் பிஎம் கிசான் இணையதளத்தில் உங்களின் கிசான் தொகை குறித்த நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தகுதி இருந்தும் பணம் கிடைக்க பெறாதவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணம் வழங்கும் பணி 1 மாதத்திற்கு நடைபெறும். அதனால் கவலை கொள்ள தேவையில்லை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் தவணைப் பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.