ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து – மத்திய அமைச்சர் தகவல்!!
ஓசூரில் விமான நிலையம் தொடங்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நெய்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள்
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, நெய்வேலி, வேலூர், தஞ்சாவூர் போன்ற சில பகுதிகளில் புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஓசூரில் அமைக்கப்பட இருந்த விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
நாடு முழுவதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல் – கல்வி அமைச்சகம் தகவல்!!
இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்ற ஒப்பந்தம் இருப்பதால் ஓசூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உதான் திட்டத்தின் கீழ் நெய்வேலி மற்றும் வேலூர் பகுதிகளில் விமான நிலையம் அமைப்பதற்கான லைசன்ஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.