இந்தியாவில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு – வெளிநாட்டவர்கள் நிம்மதி!
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரம் காரணமாக சர்வதேச விமான சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளிநாட்டவருக்கான இந்திய விசா செல்லுபடி காலம் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது.
விசா நீட்டிப்பு:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாத காலம் முதல் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கின் பொழுது சர்வதேச விமான போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப சிக்கல் ஏற்பட்டது.
ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிற்பகல் 2 மணிவரை கடைகள் திறக்க அனுமதி!
அதுமட்டுமல்லாமல் சிலரது விசா காலமும் முடிவுக்கு வந்தது. இதனால் அதனை எவ்வாறு புதுப்பிப்பது என்று தெரியாமல் சிலர் குழம்பினர். அவர்கள் பயனடையும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 29, 2020 அன்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜூன் 30,2021 அன்றுடன் விசா முடியும் வெளிநாட்டவர்களுக்கு சர்வதேச விமான சேவை போக்குவரத்து தொடங்கிய அடுத்த 30 நாட்கள் வரை விசா செல்லுபடியாகும் என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டவர்கள் தங்களது விசாவை புதுப்பித்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து தற்போது வரை இயல்பு நிலைக்கு வராத காரணத்தினால் மத்திய உள்துறை அமைச்சகம் முன்பு அறிவித்த உத்தரவினை மறுபரிசீலனை செய்து, வெளிநாட்டவருக்கான விசா அல்லது தங்கும் கால அவகாசம் வருகின்ற ஆகஸ்ட் 31,2021 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் இதற்காக வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இதற்காக கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.