மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்.15 வரை WFH நீட்டிப்பு! முழு விபரம் இதோ!
ஜனவரி 3 ஆம் தேதி 50 சதவீதம் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது பிப்ரவரி 15 வரை இந்த அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
WFH நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்திலும் தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 3 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அதில் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதற்கான அனுமதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TNPSC அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை வேலைவாய்ப்பு 2022 – முக்கிய அறிவிப்பு!
அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 50 சதவீத மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது . மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறையின்படி ஒரே நேரத்தில் அலுவலகத்தில் ஊழியர்கள் குவிவதை தடுக்க வேலை நேரங்கள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி காலை 9 மணி முதல் 5.30 மணி வரை, 10-6.30 மணி என அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
அரசு அலுவலகத்துக்கு வராத மீதம் உள்ள 50 சதவீத ஊழியர்கள் எப்போதும் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகிறார்கள். மேலும் தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் அலுவலகங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அரசு தெரிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்த நிலையில் தற்போது இது நீடிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை தொடர்கிறது.