மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கணக்கீட்டுக்கான பிட்மெண்ட் காரணி உயர்வு அறிவிப்பை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக மத்திய அரசு ஊழியர்கள் ஊதியத்தை நிர்ணயிக்கும் பிட்மெண்ட் பேக்டர் (Fitment factor) 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை பரிசீலிக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளி்க்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்பட்ட நிலையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சு நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில் மத்திய அரசின் வரிவருவாய் நிலவரமும் சீரடைந்து வருகின்றது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் மத்திய அரசுடன் ஊதியத்தை நிர்ணயிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டர் குறித்து பேச்சு நடத்தத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அரசாங்கம் அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிட்மெண்ட் ஃபேக்டர் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். ஃபிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்தி அறிவித்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் என்பது ரூ.18 ஆயிரமாக இருக்கிறது.

ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயில்கள்!

இதை பிட்மெண்ட் ஃபேக்டர்படி ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. தற்போது பிட்மெண்ட் ஃபேக்டர் படி 2.57 என்ற அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. பிட்மெண்ட் ஃபேக்டர் படி 3.68 என்ற அளவில் உயர்த்தப்பட்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரம் ஊதிய உயர்வு கிடைக்கும். இதனால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.26 ஆயிரமாக அதிகரிக்கும். உதாரணமாக ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலோவன்ஸ் தவிர்த்து, 2.57 ஃபிட்மெண்ட் காரணியின்படி ரூ.46,260 கிடைக்கும். 7-வது ஊதியக்குழுவின் படி பிட்மெண்ட் ஃபேக்டர் 3.68% என உயர்த்தப்பட்டால் ஊதியம் பெறும் அளவு ரூ.95,680 ஆக அதிகரிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!